புரியாத‌ ம‌ர‌ண‌மும் பாச‌மும்

ம‌ர‌ண‌ப் ப‌டுக்கையிலிருந்த‌
தாத்தாவிற்கு

நிறைவேறாத‌ ஆசையிருப்பதாக‌

வாழ்ந்த‌ ம‌ண்ணையும்
அணிந்த‌ பொன்னையும்
இழைத்து ஊட்டினார்க‌ள்

அப்பொழுதும் பிரியாத‌
ஆவியினால்

பெண்ணாசையாக‌ இருக்க‌லாமென்று
வாழ்விழ‌ந்த‌ பெண்ணொருத்தியை
முத்த‌மிட‌ச் சொன்னார்க‌ள்

அப்பொழுதும் பிரியாத‌
ஆவியினால்
ச‌ட‌ங்குக‌ள் தொட‌ர‌...

க‌டைசியாக‌
நான் பாலுட்ட‌
பிரிந்து போன‌து ஆவி

அருகிலிருந்த‌ கிழவி
ஒருத்தி சொன்னாள்
அம்புட்டு பாச‌ம் பேர‌ன் மீது

குற்ற‌ உண‌ர்வில்
நான் நிற்க ............

க‌டைசி வ‌ரை புரிய‌வில்லை
தாத்தாவின் ம‌ர‌ண‌மும் பாச‌மும்


                   - கா சரவணன்

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம்
சக்தி
அருமை நண்பரே...
மரணத்தின் போது நிகழும் நிகழ்வு...

அருகிலிருந்த‌ கிழவி
ஒருத்தி சொன்னாள்
அம்புட்டு பாச‌ம் பேர‌ன் மீது
உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil