இவற்றிக்கென்று
தனியிடம் உண்டு
முக்கியமாக
மூத்திரச் சந்துகள்...
பள்ளிக் கூடச் சந்துகள்...
பாதியில் நின்று போன
பாளங்கள்...
பாலடைந்த கட்டிடங்கள்...
சாலையோரச் சுவர்கள்
எங்கிருந்தாலும்
கவனம் ஈர்க்கும்
இங்கு நோட்டிஸ் ஒட்டாதே!
எனும் இடத்தில்
இடம் பிடித்த சுவரொட்டிகளுக்குள்
ஓர் கர்வமிருக்கும்
பழையன கழிதலும்...
புதியன புகுத்லும்...
இவற்றிர்க்கும் பொருந்தும்.
கிழிபடும் போது
கதறல் சத்தமோ...
இடம்பெரும் போது
சிரிப்பு சத்தமோ கிடையாது
சுவரொட்டிகளுக்கு!
ஒன்றின் இடத்தை
மற்றொன்று பெறும் போது
சண்டைகள் மூண்டதுண்டு...
மனிதர்களுக்குள்ளாக
எது எப்படியிருப்பினும்
சில தேடல்களையும்
பல தகவல்களையும்
தந்து செல்கின்றன....
சுவரொட்டிகள்!
- கா.சரவணன்
Prev NextGo Back