காலத்துக்கும் உயிர்ப்பு உண்டென்று
காலைகளில் தென்றலாய் - புத்துணர்ச்சியும்
மதியங்களில் உச்சமாய் - வெயிலும்
அந்தியில் நெகிழ்ந்த - வானமும்
அடக்கமான இரவுகளும்.
இயற்க்கையின் வெளிப்பாடுகளில்
நாளும் மூழ்கியெழும்
நமக்குத் தெரியாத என்ன
காலத்துக்கும் உயிர்ப்பு உண்டென்று......
- பிரகாஷ் சம்பந்தம்
Prev NextGo Back